For Daily Alerts
Just In
டெல்லியில் மீண்டும் பெரியார் மையம் கட்டித் தர கோரிக்கை
சென்னை:
டெல்லியில் இடிக்கப்பட்ட பெரியார் மையத்தை அம் மாநில அரசே மீண்டும் கட்டித் தர வேண்டும் என திராவிடர்கழகம் கோரியுள்ளது.
திராவிடர் கழக பொது கூட்டம் இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
டெல்லியில் பெரியார் மையத்தை இடித்த அந்த அரசே திரும்பவும் அங்கு பெரியார் மையத்தை கட்டித்தரவேண்டும்.
69 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை திரும்ப கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பனஉள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]