கருணாநிதியை மீண்டும் கைது செய்ய ஜெ. தீவிரம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மீது மீண்டும் கை வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் முதல்வராகவுள்ளஜெயலலிதா.
பா.ஜ.கவுடன் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டதன் மூலம் திமுகவை தனிமைப்படுத்தும் தனது முயற்சிகளில்ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார் ஜெயலலிதா.
தன மீது கருணாநிதியின் ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்குகளில் இருந்த ஒன்றன் பின் ஒன்றாகவிடுதலையாகிக் கொண்டிருக்கிறார் ஜெ. அடுத்தகட்டமாக கருணாநிதியை சிறையில் தள்ளும் முயற்சிகளில்ஈடுபடுவார் என்று தெரிகிறது.
கடந்தமுறை போல அவசர அவசரமாக கருணாநிதியைக் கைது செய்தது போல் இல்லாமல் இந்த முறை திமுகஆட்சிகால ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி வழக்குகள் பதிவு செய்து, பின்னர் அவரைக் கைதுசெய்யத் திட்டமிட்டுள்ளது அரசு.
கருணாநிதி மீதான ஊழல் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்றுகூறியுள்ளது, விரைவில் திமுகவை ஜெயலலிதா குறி வைப்பார் என்பதைத் தான் காட்டுகிறது.
கடந்த முறை கருணாநிதியை நள்ளிரவில் வீட்டில் நுழைந்து கைது செய்தபோது தமிழகமே கொதித்து எழுந்தது.மத்திய அரசின் நெருக்குதல் காரணமாக அவர் ஜாமீனில் விடுதலையானார். அவருடன் கைதான ஸ்டாலினும்ஜாமீனில் தான் விடப்பட்டார்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் கருணாநிதி கைதுசெய்யப்படலாம் என்று தெரிகிறது