For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எப்.பி.ஐ. உதவி தேவையில்லை: இந்தியா நிராகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி விசாரிப்பதற்கு அமெரிக்க புலனாய்வுத் துறையான பெடரல் பியூரோஇன்வெஸ்டிகேசன் (எப்.பி.ஐ.) உதவி தேவையில்லை என்று இந்தியா கூறிவிட்டது.

இந்தியாவுக்குத் தேவைப்பட்டால், இதுகுறித்து புலனாய்வு விசாரணை செய்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்றுஇந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் பிளாக்வெல் கூறியிருந்தார்.

அமெரிக்க உயர் அதிகாரிகளும் இதுகுறித்து இந்தியத் தூதரிடம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் எப்.பி.ஐயின் உதவி தேவையில்லை என்று இந்தியா கூறிவிட்டது. "விசாரணைக்குத் தேவையான எல்லாவசதிகளும் எங்களிடம் இருப்பதால், எங்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படவில்லை" என்று இந்தியஅதிகாரிகள் அமெரிக்காவுக்குப் பதில் கூறிவிட்டனர்.

ஆனாலும் இது தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம் என்று அமெரிக்க அதிகாரிரிச்சர்டு பவுச்சர் கூறினார்.

இந்திய நாடாளுமன்றம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை அமெரிக்க எச்சரிக்குமா என்று அவரிடம் ஒரு நிருபர்கேட்டபோது, "இன்னும் விசாரணையை இந்தியா முடிக்கவில்லை. அதற்குள் எப்படி நாங்கள் கருத்துக் கூறமுடியும்?" என்று அவர் பதிலளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X