For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காண்டஹாரிலிருந்து 4 அரேபிய கைதிகள் தப்பி ஒட்டம்

By Staff
Google Oneindia Tamil News

காண்டஹார்:

ஆப்கானிஸ்தானின் காண்டஹார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 அரேபியக் கைதிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தப்பியோடி விட்டனர்.

மேலும் 9 பேர் தப்பியோடும் போது நகர அதிகாரிகளால் பிடிக்கப்பட்டதாக அம்மருத்துவமனையின் தலைமைநர்ஸ் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 13 அரேபியர்கள் சிறிய காயங்களுடன் காண்டஹாரில் உள்ள மீர்வைஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் இருந்த அறைக்கு மருத்துவமனை ஊழியர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

"நாங்கள் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யவில்லை. இன்று அதிகாலை அவர்களாகவே சென்று விட்டனர். அவர்கள்எப்படி தப்பினார்கள் என்று தெரியவில்லை" என்று அந்த மருத்துவமனையின் தலைமை நர்சான குலாம் முகமதுஆப்கன் கூறியுள்ளார்.

இவர்கள் தப்பி ஓடியதற்கு காவலாளிகளும், பழங்குடி தலைவர் முல்லா நஹிபுல்லாவும் தான் காரணம் என்று அவர்குற்றம் சாட்டியுள்ளார்.

2 அமெரிக்கா மெரைன் அதிகாரிகள் காயம்:

காண்டஹார் விமான நிலையத்தில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டுஅமெரிக்க மெரைன் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

அமெரிக்க தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத பின்லேடனும், அவனது கூட்டாளிகளும் காண்டஹாரை விட்டுவெளியேறும்போது, அங்கு சில குண்டுகளை வைத்துவிட்டுத்தான் சென்றுள்ளனர்.

பிறகு அந்நகரின் விமான நிலையத்தை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்லேடன் அங்குஏதாவது குண்டு வைத்திருக்கலாம் என்று அமெரிக்க மெரைன் அதிகாரிகள் விமான நிலைய ரன்வேயைஆராய்ந்தனர்.

அப்போது அங்கு இருந்த குண்டு தவறுதலாக வெடித்ததில் இரண்டு மெரைன் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X