For Daily Alerts
Just In
திண்டிவனம் அருகே லாரி-ஜீப் மோதி 2 போலீசார் பலி
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே டேங்கர் லாரியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 போலீசார் உயிரிழந்தனர்.
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சில கைதிகளை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போலீசார் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது திண்டிவனம் அருகே வேகமாக வந்த ஒரு ஆயில் டேங்கர் லாரியுடன் ஜீப் நேருக்கு நேர் மோதியது.
இவ்விபத்தில் ஜீப்பை ஓட்டி வந்த தலைமைக் காவலர் உள்பட இரண்டு போலீசார் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த மேலும் மூன்று போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]