For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக ஆட்சி பாலங்கள் ஊழல்: கமிஷன் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட பாலங்களில் நடந்துள்ள முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரித்துவரும் நீதிபதி என்.ஆறுமுகம் கமிஷன் இன்று பெரம்பூர் மேம்பாலத்தை பார்வையிட்டது.

இந்தப் பாலம் திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் கண்காணிப்பின் கீழ்கட்டப்பட்டது.

ஆனால், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு தூண் மண்ணில் புதைந்துவிட்டது. இதனால், பாலம் கட்டும்பணி நிறுத்தப்பட்டது. முதலில் சரியாக மண்ணின் தரத்தை ஆராயாமல் இந்தப் பாலம் கட்டப்பட்டதாக புகார்எழுந்தது.

மேலும் இந்தப் பாலத்தை கட்டியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகத் தான் திமுக தலைவர் கருணாநிதியும் ஸ்டாலினும் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் கமிட்டிஅமைக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற தமிழக அரசின் தலைமை என்ஜினியர்களான ரத்தினவேலு, ஷியாமளாதேவி தம்புராட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாலத்தை பார்வையிட்ட பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆறுமுகம் கூறுகையில்,

இந்திய சாலை அமைப்பு விதிகள் மீறி இந்தப் பாலம் கட்டப்பட்டதா என்பதை விசாரித்து வருகிறோம். விசாரணைமுடிந்தவுடன் அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார்.

சென்னையில் மட்டும் திமுக ஆட்சியில் 10 பாலங்கள் கட்டப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X