ஜெ.வை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த முடியாது: வாழப்பாடி
மதுரை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது சாத்தியமில்லாததுஎன்று கூறினார் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
மதுரையில் இன்று (புதன்கிழமை) அவர் நிருபர்களிடம் பேசும்போது, ஆண்டிப்பட்டியில் மதிமுகவும் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இங்கு ஜெயலலிதாவை எதிர்த்துப் பொது வேட்பாளரைநிறுத்த முடியாது என்று கூறினார்.
காங்கிரஸ் ஏற்கனவே கோஷ்டி மோதலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது ஏன் உங்கள் கட்சியைஅதனுடன் இணைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, எந்தக் கட்சியில்தான் கோஷ்டிப் பூசல் இல்லை என்றுவாழப்பாடி பதிலளித்தார்.
சென்னையில் கண்ணகி சிலை அகற்றப்பட்டது குறித்து அவர் கூறும்போது, உண்மையிலேயே மக்கள் நன்மைக்காகஅந்தச் சிலை அகற்றப்பட்டிருந்தால் அதில் தவறொன்றும் இல்லை என்ற வாழப்பாடி, இதற்கு வேறு ஏதாவதுகாரணங்கள் இருந்தால் அது கண்டனத்துக்குரியதுதான் என்றார்.