பீகாரில் கடும் குளிர்: இதுவரை 44 பேர் பலி
பாட்னா:
பீகாரில் நிலவி வரும் கடுமையான குளிர் காரணமாக இதுவரை 44 பேர் இறந்துள்ளனர்.
இன்றும்கூட அதிகாலை டெல்லியில் பனிமூட்டம் நிலவியது. இங்கு இன்று காலை குறைந்தபட்சமாக 4 டிகிரிசெல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அடுத்த ஒரு மாதத்தில் இது இன்னும் குறையக்கூடும்.
இந்நிலையில் வட இந்திய மாநிலமான பீகாரிலும் மக்களை குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாப்ராமாவட்டத்தில்தான் அம்மாநிலத்திலேயே குறைந்த அளவாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.அதிகபட்ச வெப்பமும் 15 முதல் 18 டிகிரி செல்சியஸ்தான்.
இதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மூடப்பட்டு விட்டன. இம்மாத இறுதிவரை அந்தப் பள்ளிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாகவே பீகாரில் டிசம்பர் மாதத்தில் 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுமாம். ஆனால் இந்தஆண்டுதான் இவ்வளவு குறைவான வெப்பநிலை காணப்படுகிறது என்று வானிலை ஆய்வு நிபுணர்கள்ஆச்சரியப்படுகின்றனர்.
"கேம்ப் ஃபயர்" மாதிரி ஆங்காங்கே மக்கள் தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
ஆனாலும் குளிருக்கு இதுவரை பீகார் மாநிலத்தில் மட்டும் 44 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில்முஷாபர்பூரில் மட்டும் 13 பேர் குளிர் காரணமாக இறந்துள்ளனர்.