கண்ணகி சிலை அகற்றம் ஏன்?- கமிஷனர் விளக்கம்
சென்னை:
போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால் தான் மெரீனா கடற்கரையிலிருந்து கண்ணகி சிலை அகற்றப்பட்டதாகசென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கண்ணகி சிலை சிதைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் தான், காவல் துறை மற்றும்பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அகற்றப்பட்டது. வேறு எந்தக் காரணமும் இல்லை.
திரும்பவும் வேறு இடத்தில் சிலையை வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீடுகளில் வேலை செய்வோரைப் பற்றி முழு விவரத்தையும் ஆராயும் வகையில் காவல் நிலையத்திலேயே ஒரு தனிபிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதன்படி தங்கள் வீட்டுக்கு அமர்த்தப் போகும் வேலையாட்களைப் பற்றி சொன்னால் அவர்களைப் பற்றிய முழுவிவரத்தையும் இந்த பிரிவு ஆராய்ந்து, கண்டுபிடித்து வீட்டுக்காரர்களிடம் சொல்லப்படும். இதற்காக தனியாககட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று விஜயகுமார் கூறினார்.