For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகை அருகே தரை தட்டி நின்ற மலேசியா கப்பல்

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்:

பலத்த காற்று காரணமாக மலேசியாவிலிருந்து பாமாயில் கொண்டு வந்த மலேசியக் கப்பல் ஒன்று நாகப்பட்டினம்துறைமுகம் அருகே தரை தட்டி நின்றதில் அதிலிருந்த பாமாயில் கடலில் கொட்டியது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கம்பெனிக்காக பாமாயில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது அந்தக் கப்பல்.

ஆனால் அப்போது பலத்த காற்று வீசிய காரணத்தால் திசை மாறிய கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்துஐந்து கி.மீ. தூரத்தில் தரை தட்டி நின்றது.

இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த பாமாயில் கடலில் கொட்ட ஆரம்பித்தது. விரைவில் அது கடல் நீரில் பரவஆரம்பித்தது.

உடனே சுதாரித்துக் கொண்ட கப்பல் ஊழியர்களும், நாகப்பட்டினம் துறைமுக அதிகாரிகளும் விரைந்துசெயல்பட்டு, சிறிய படகுகள் மூலம் கப்பலிலிருந்த பாமாயிலை சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு வந்துவிட்டனர்.

கடலில் பாமாயில் கொட்டி நீர் பாழாகிவிட்டதால், அங்குள்ள மீன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில்அவை இறந்துவிடும் என்று மீனவர்கள் அஞ்சுகிறார்கள்.

மேலும் 5 கி.மீ. தூரத்திற்கு கடல் முழுவதும் எண்ணெய் கொட்டியிருப்பதால், கடல் நீர் முழுவதும் பிசுபிசுப்புடன்மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறது.

இதையடுத்து, அந்தக் கப்பலை ஆழமான பகுதிக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X