For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணகி சிலையை வேறு இடத்தில் நிறுவ உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை தொடர்பான வழக்குகள் முடியும் வரை அதை வேறு எங்கும்நிறுவக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணகி சிலையை அகற்றிய தமிழக அரசு, அந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாலும், போக்குவரத்துக்கு அது மிகவும் இடையூறாக இருப்பதால்தான் அதை அகற்றிவிட்டு தார் ரோடுபோட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் காந்தி உட்பட 3 மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சிவசுப்பிரமணயம்ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கு முடியும் வரை கண்ணகி சிலையை தமிழக அரசு வேறு இடத்தில் வைக்க இடைக்கால தடைவிதிக்கப்படுகிறது.

தமிழக அரசு அமைத்த ஐவர் குழு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் கண்ணகி சிலையை அகற்றியதற்கு, தமிழக தலைமை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர்விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X