கண்ணகி சிலையை எங்கே வைப்பது? - ஐவர் குழு ஆய்வு
சென்னை:
அகற்றப்பட்ட சிலையை மீண்டும் எங்கே வைக்கலாம் என்று ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு 5 பேர் கொண்டகுழுவை நியமித்துள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் தக்க இடத்தில் வைப்பதற்காகஅரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், சென்னை மாநகராட்சி ஆணையாளர், தலைமைப் பொறியாளர்,பொதுப்பணித் துறை (கட்டடப் பிரிவு) நெடுஞ்சாலை ஆய்வு நிலைய இயக்குநர் மற்றும் செய்தி-மக்கள் தொடர்புஇயக்குநர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது அரசினால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலையை, விபத்தினால் பாதிக்கப்படாத வகையில்மெரீனாவிலேயே பொருத்தமான இடத்தில் வைக்க வேண்டும் என்று அக்குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நன்கு ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை விரைந்து இக்குழு அளிக்க வேண்டும் என்றும் அரசுஉத்தரவிட்டுள்ளது.