கண்ணகி சிலை விவகாரம்: கருணாநிதி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை:
கண்ணகி சிலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளின்கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நாளை (சனிக்கிழமை) கூட்டவுள்ளார்.
மெரினா கடற்கரையிலிருந்து கண்ணகி சிலையை அகற்றியதை அனைத்து கட்சிகளும் தங்களது கண்டனத்தைதெரிவித்துள்ளன. மேலும் அதை இடத்தில் மீண்டும் நிறுவவும் தமிழக அரசை கேட்டு கொண்டுள்ளன.
இந்நிலையில் இது பற்றி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பற்றி விவாதிக்க, அண்ணாஅறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளார் கருணாநிதி.
இந்த கூட்டத்திற்கு, காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜக, திக, தமாக, இ.கம்யூனிஸ்ட் உட்பட 17 கட்சித்தலைவர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் தமிழ் புலவர்கள், எழுத்தாளர்கள், மூதறிஞர்கள் அனைவருக்கும் கடிதம் கருணாநிதி எழுதியுள்ளார்.
நாளை நடக்கும் அந்த கூட்டத்தில் சிலையை அதே இடத்தில் வைக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம்என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.