அமெரிக்க விமானத்தைத் தகர்க்கும் முயற்சி முறியடிப்பு
பாஸ்டன்:
பாரிசிலிருந்து மியாமிக்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-63 விமானத்தை வெடிகுண்டால்தகர்க்க பயணி ஒருவர் மேற்கொண்ட முயற்சியை விமான ஊழியர்கள் முறியடித்தனர்.
விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்திலிருந்த ஒரு பெண் ஊழியருக்கு ஏதோ கருகும்வாடை அடித்துள்ளது. உடனே அந்த விமானப் பணிப்பெண் தீவிரமாகக் கண்காணித்துள்ளார்.
விமானத்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்த ஒரு பயணி தன் ஷூக்களிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த வயர்களை"ப்யூஸ்" பண்ணும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது அப்போது தெரிய வந்தது.
உடனடியாக விமானப் பணிப்பெண் அவரைத் தடுத்துள்ளார். இதையடுத்து பணிப்பெண்ணின் கையை அந்தப்பயணி கடித்து விட்டார். உதவிக்கு வந்த மற்றொரு பணிப்பெண்ணையும் அப்பயணி தாக்கிக் காயப்படுத்தினார்.
இதற்குள் சுதாரித்துக் கொண்ட மற்ற பயணிகள் அந்த நபரைச் சுற்றி வளைத்து, அவனை இறுக்கையோடுபெல்ட்டால் கட்டிப் போட்டனர்.
அதே விமானத்தில் பயணம் செய்த இரு டாக்டர் பரபரவென்று செயல்பட்டு அவனை மயக்கமடையச் செய்தனர்.அவனுடைய ஷூக்கள் உடனடியாகக் கழற்றப்பட்டன. இந்த ஷூக்களில் ஒன்றில்தான் அவன் வெடிகுண்டைமறைத்து வைத்திருந்தான்.
இதற்கிடையே பைலட்டுகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அமெரிக்க வான் எல்லையைத் தொட்டவுடன்இரு அமெரிக்க எப்-15 ரக போர் விமானங்கள் இவ்விமானத்துக்குப் பாதுகாப்புக்கு வந்துவிட்டன.
பின்னர் அவ்விமானம் பாஸ்டன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகளும்பத்திரமாகத் தரையிறங்கினர்.
அவனை அள்ளிக் கொண்டுபோன அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. நடத்திய விசாரணையில்,ரிச்சர்ட் ரெய்ட் என்ற பெயரில் போலியான இங்கிலாந்து பாஸ்போர்ட்டை அவன் வைத்திருந்தது தெரிய வந்தது.
ஆனால் அவன் மத்திய கிழக்கு நாடுகளில் ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்தவன் என்றும், 28 வயதான அவன்தன்னுடன் எந்தவிதமான லக்கேஜையும் எடுத்து வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவனுடைய ஷூவில் இருந்த சி-4 டெட்டனேட்டர் ரக வெடிகுண்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது.ஷூவில் இது மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும், இதன் மூலம் விமானம் முழுவதையுமே தகர்த்திருக்க முடியும்என்று வெடிகுண்டு நிபுணர்கள் கூறினர்.
கிறிஸ்துமசை முன்னிட்டு தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிதான் இது என்று கூறப்படுகிறது.