சென்னையில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை)வந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனரில் கண்ட்ரோல் ரூமுக்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
சென்னையின் பரபரப்பு மிகுந்த மவுண்ட் ரோடில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் பேசிய நபர் கூறினார்.
மேலும் அந்த வெடிகுண்டு சரியாக மாலை 3 மணிக்கு வெடிக்கும் என்றும் அந்நபர் கூறினார்.
இதையடுத்து பரபரப்படைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துக் கொண்டு வீட்டு வசதி வாரியஅலுவலகத்துக்குப் பறந்து சென்றனர்.
அந்த அலுவலகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடிப் பார்த்த நிபுணர்கள் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லைஎன்று அறிந்து நிம்மதி அடைந்தனர்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த அந்த தொலைபேசித் தகவல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது.
இருந்தாலும் அந்த அலுவலகம் இருக்கும் கட்டடத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.