தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, அடுத்த 48 மணி நேரத்தில் கனத்த மழை பெய்யும்என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த இரு நாள்களில் தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்துள்ளது.
இம்மழை தொடர்ந்து பெய்யும் என்றும் மழையின் தீவிரம் மேலும் அதிகமாகும் என்றும் வானிலை ஆய்வு மையஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது என்றும் அதிகாரிகள்தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னைக்குக் குடிநீர் தரும் பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழாவரம் உள்பட பலஏரிகளிலும் நீர்வரத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இப்போது உள்ள நீர் அடுத்த பத்து மாதங்களுக்குப் போதுமானது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்கூறினர்.
சமீப ஆண்டுகளில் டிசம்பர் மாதம் பெய்யும் மழையின் அளவு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.