ரீட்டாவுக்கு மாதந்தோறும் வட்டி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கற்பழிக்கப்பட்ட ரீட்டாவுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணத்தை தமிழ்நாடு பலர் பைனான்ஸ்கார்ப்பரேஷனில் முதலீடு செய்து மாதா மாதம் வட்டியை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ரீட்டாவை செஞ்சி சிறைச்சாலையில் சிறை வார்டர்கள் கற்பழித்ததாக கூறப்பட்டது. அதனால்அந்த சிறைவார்டர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு ரீட்டாவுக்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் தருவதாக ஒத்து கொண்டது. இந்நிலையில் இந்தவழக்கு நீதிபதி தினகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அவர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ரீட்டாவுக்கு ரூ.5 லட்சத்தை இடைக்கால நிவாரண நிதியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தபணத்தை தமிழ்நாடு பவர் கார்ப்பரேஷனில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். பிறகு 3ஆண்டுகளுக்கு ஒரு முறை முதலீட்டை நீடிக்க வேண்டும். மாத வட்டியை ரீட்டாவுக்கு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ரீட்டாவுக்கு வீடு வழங்குவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த வீட்டைஅவரது ஆயுள் காலம் வரை அவர் வாடகைக்கு விடவோ, குத்தகைக்கு விடவோ, பிறர் பெயருக்கு மாற்றவோகூடாது.
ரீட்டா தனக்கு வேலை தர வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளார். அதை அரசு பரிசீலித்து சாதகமான முடிவுஎடுக்க வேண்டும். அல்லது அவரது மறுவாழ்விற்கு சுயவேலைக்கு வழி வகுக்கும் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது.
பெண்களுக்கு என்று சப் ஜெயில் ஒன்றை உருவாக்கி அதில் பயிற்சி பெற்ற பெண் நிர்வாகிகளை நியமிக்கவேண்டும். அதுவரை இது போன்ற அபலை பெண்களை விஜிலியன்ஸ் ஹோமில் தான் காவலில் வைக்கவேண்டும்.
ஐ.ஜி. திலகவதி சிறப்பாக விசாரணை நடத்தியுள்ளார். இதற்கு உயர் நீதிமன்றம் தனது பாராட்டுதலை தெரிவிக்கிறதுஎன்று அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.