For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பருவமழை: மேட்டூர் அணை மூடல் - மின் உற்பத்தி பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

ஜனவரி 28ம் தேதி மூடப்பட வேண்டிய மேட்டூர் அணை, காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கடந்த சனிக்கிழமை இரவு மூடப்பட்டது. இதனால் 240 மெகாவாட் மின்சார உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூலை 12ம் தேதி திறக்கப்பட்டது. குறுவை சாகுபடிமுடிவடைந்து ஜனவரி 28ம் தேதி அணை மூடப்பட வேண்டும்.

ஆனால் தற்போது பருவமழை காவிரி டெல்டா பாசனப்பகுதியில் தீவிரமடைந்துள்ளது. அதனால் நேற்றுமுன்தினமே இரவு மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டது.

அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லாததால், அணை மின் நிலையத்தில் உள்ள நான்கு மின் உற்பத்திநிலையங்களில் 40 மெகாவாட் மின் உற்பத்தியும், சுரங்கப்பாதையில் உள்ள நான்கு நீர் மின் உற்பத்திநிலையங்களில் 200 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு விட்டது.

செக்கானூரணி, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சி கோட்டை, குதிரைக்கல்மேடு ஆகிய நான்கு இடங்களில் உள்ள நீர்தேக்க நிலையங்களில் உள்ள நான்கு மின் உற்பத்தி நிலையங்களில் தலா30 மெகாவாட் மின் உற்பத்தி வீதம் 120மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X