For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவிலிருந்து இன்று நாடு திரும்புகிறார் முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

பெய்ஜிங்:

சீனாவில் கடந்த 4 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரப் இன்று இஸ்லாமாபாத் திரும்புகிறார்.

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் ஆதரவைப் பெற அவர் பல முயற்சிகள் மேற்கொண்டார். இந்த விவகாரத்தில்நேரடியாக தலையிட மறுத்துவிட்டது சீனா.

ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்துறைக்கு தனது நாட்டு வங்கியின் கடனுதவியைவழங்கி இந்தியாவிற்கு எப்போதுமே தான் ஒரு தலைவலி தான் என்பதைக் காட்டிவிட்டது சீனா.

இன்று குவான்சூ மகாணத்தில் சுற்றுப் பயணம் செய்த முஷாரப் கூறுகையில், அமெரிக்காவால் தடை செய்யப்பட்டலக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் (இந்தியாவைத் தாக்கிய தீவிரவாத அமைப்புகள்) ஆகியவை தவறுசெய்ததாக ஆதாரங்கள் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த அமைப்பாக இருந்தாலும் அது உலகின் எந்தப் பகுதியில் தீவிரவாதத்தில் ஈடுபட்டாலும் அதன் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தியா மீது நடந்த தாக்குதல் குறித்து நிருபர்கள் கேட்டபோது, பதில் கூற முஷாரப் மறுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X