For Daily Alerts
Just In
மூப்பனார் மறைவு: 17ம் தேதி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்தல்
டெல்லி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் இறந்ததையடுத்து ராஜ்யசபாவில் ஏற்பட்டுள்ளவெற்றிடத்திற்கான இடைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நடக்கிறது.
ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்களின் தலைவராகச் செயல்பட்டு வந்தார் மூப்பனார்.
கடந்த ஆகஸ்டு 30ம் தேதி காலமான மூப்பனாருக்கு 2004ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வரை பதவிக் காலம்இருந்தது.
இவர் மறைவையடுத்து இந்த இடம் காலியாகிவிட்டது. வரும் ஜனவரி 17ம் தேதி இந்த இடத்திற்கான தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வரும் 31ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை இதற்கான மனுக்களை தாக்கல் செய்யலாம். ஜனவரி 10ம் தேதிமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டிய கடைசி நாள்.
ஜனவரி 21ம் தேதிக்குள் அந்த இடத்திற்கான எம்.பி. தேர்வு செய்யப்படவுள்ளார்.
Comments
Story first published: Saturday, June 1, 2002, 5:30 [IST]