For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் போர்நிறுத்தம் அமல்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஒருமாத கால போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்குவந்ததையடுத்து, இலங்கை ராணுவமும் போர் நிறுத்ததை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடைப்பிடிக்கிறது.

இனப் பிரச்சனைக்கு தீர்வு காணவும் இலங்கையில் மீண்டும் அமைதி காணவும் புதிதாகப் பதவி ஏற்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளார்.

இதற்கு உதவும் பொருட்டு டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஒரு மாத போர் நிறுத்தம் செய்வதென விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர்.

இதை வரவேற்ற இலங்கை அரசும், ஒரு மாத காலப் போர் நிறுத்தத்தில் ராணுவமும் ஈடுபடும் என்றுதெரிவித்திருந்தது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் தன் படையினருக்கு இதுகுறித்து உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும் போர் நிறுத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்துராணுவ செய்தி தொடர்பாளர் சனத் கருணரத்னே கூறுகையில்,

விடுதலைப்புலிகளின் கைவசமுள்ள வடக்கு இலங்கையிலும், கிழக்கு இலங்கையிலும் போரை நிறுத்துமாறுஇலங்கை படைகளுக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது.

அதனால் இலங்கை ராணுவம் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. விமான தாக்குதலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகள் ராணுவ ஆயுதங்களை கடத்தி விடுவார்களோ என்று அஞ்சும் இலங்கைகடற்படையினர் மட்டும் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விமானப் படையும்அவர்களுக்கு உதவி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் விஜயம் மேற்கொண்டுள்ள விக்கிரமசிங்கே, இந்தப் போர் நிறுத்தம் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்படலாம் என்று கூறியுள்ளதாக கருணரத்னே கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X