பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது பறக்கத் தடை வரும்?
டெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்புக்கான கேபினட்கமிட்டியின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடியது.
இக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உள்பட பல்வேறு அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், உளவுப் படை அதிகாரிகள்இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், இமயமலையில் சியாச்சின் பகுதியில் உள்ள பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசால் உடனடியாக டெல்லி வர முடியவில்லை.
அங்கு மிக மோசமான வானிலை நிலவுவதால், ஹெலிகாப்டர் புறப்பட முடியவில்லை. இதனால், அவர் டெல்லிவருவது தாமதமாகிவிட்டது. அவர் வந்தவுடன் நாளை மீண்டும் பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் பிரதமரின்இல்லத்தில் கூடும்.
இன்று நடந்த கூட்டத்தில் இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானின் எந்த விமானமும் பறக்கக் கூடாது என தடைவிதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதே போல இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்களில் உள்ள அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்டஸ் ஆற்று நீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதில் இந்தியா இதுவரை விட்டுத் தரும் போக்கைகடைபிடித்தது. இனிமேல், சர்வதேச சட்டப்படி இந்தியாவுக்கு வர வேண்டிய நீரை கட்டாயம் வாங்கியே ஆவதுஎன மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆறுகளில் அணைகள் கட்டுவது போன்ற பணிகளில் இனிஇந்தியாவின் அனுமதியை பாகிஸ்தான் பெற வேண்டி வரும். இல்லாவிட்டால் சர்வதேச விதிகளின்படிதிட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தச் செய்யுமாறு இந்தியாவால் கோர முடியும்.
பாகிஸ்தானுக்கு இந்திய வர்த்தகத்துறை கொடுத்திருந்த மிக முக்கியமான வர்த்தக நாடு என்ற அங்கீகாரத்தைநீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவை குறித்து இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாளை மீண்டும் கூடும் இந்தக் கமிட்டியின்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு எந்தெந்த வகையில் தொல்லை தர முடியுமோ அனைத்து வகையிலும் பிரச்சனை தருவது என்றமுடிவுக்கு இந்தியா வந்துவிட்டது.
கார்கில் மற்றும் சியாச்சின் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் திரும்பும் பெர்னாண்டஸ் இக் கூட்டத்தில்எல்லையில் நிலவி வரும் நிலவரம் குறித்து விளக்குவார்.
பாகிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதர் விஜய் கே. நம்பியாரும் இன்று நடந்தகூட்டத்தில் கலந்து கொண்டார். நாளையும் அவர் இக் கூட்டத்தில் பங்கேற்பார்.
நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 13 நாட்களில் 4வது முறையாக இக் கூட்டம் நடந்துள்ளது. நாளைநடப்பது 5வது கூட்டம்.