இந்திய ஏவுகணைகளும் தயார்: பெர்னாண்டஸ்
டெல்லி:
எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் ஏவுகணைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
அக்னி-1 ரக ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது 2,500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும்திறன் கொண்டது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயார்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை.
ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய இடங்களில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் ஜனவரி முதல் வாரகத்தில் போர்பயிற்சியில் ஈடுபடும் என்றார்.
எல்லையில் இந்தியாவை நோக்கி பல ஏவுகணைகளை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது. சீனாவில்தயாரிக்கப்பட்ட எம்-11, எம்-9 ஆகிய ஏவுகணைகளும், இவை 600 முதல் 750 கி.மீ. வரை பாய்ந்து சென்றுதாக்கும் திறன் கொண்டவை. இவை தவிர 1150 முதல் 1500 கி.மீ. பாயும் திறன் மிக்க கோரி-1, கோரி-2, 2500கி.மீ. பாயும் திறன் கொண்ட சகீன்-2 ஆகிய ஏவுகணைகளையும் பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்துள்ளது.
இதற்கு எதிராக 150 கி.மீ. பாயும் பிரித்வி-1, 1500 கி.மீ. பாயும் அக்னி-1 ஆகிய ஏவுகணைகளை இந்தியாஎல்லைக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. இவற்றை நடமாடும் லாஞ்சர்கள் மூலம் செலுத்த முடியும் என்பதால்,தேவைப்பட்ட இடத்திற்கு விரைவாக அனுப்ப முடியும். இந்த ஏவுகணைகளை ராணுவத்தின் 333 ஏவுகணைப்பிரிவு தான் செலுத்தும்.
இவை தவிர ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பல ஏவுகணைகளும் இந்தியாவிடம் உள்ளன.
ரஷ்யாவிடமிருந்து அதிநவீன டி-90 ரக டாங்கிகளும் இந்த மாத இறுதியில் இந்தியா வந்திறங்கவுள்ளன.