For Daily Alerts
Just In
மேட்டூர் அணையின் உயரம் 10 அடி கூடுகிறது
மேட்டூர்:
மேட்டூர் அணையின் உயரத்தை 10 அடி உயர்த்தி கட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேட்டூரில் காவிரி ஆற்றின் நடுவே ஸ்டாலின் அணை 1934ம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில்கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 124 அடி. 59 சதுரமைல்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இந்த அணையிலிருந்து தமிழக அரசு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மேலும் விவசாய நிலங்களுக்குபாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் உயரம் 124 அடி ஆதலால் 120 அடிக்கே தண்ணீர் சேமித்துவைக்க முடியும்.
இதனால் மழைக் காலத்தில் நிறைய தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் தண்ணீர் வீணாகிறது. இதனால்அணையின் உயரத்தை 10 அடி உயர்த்தி கட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் 10 முதல் 15 டி.எம்.சி. கன அடி நீரை கூடுதலாக சேமிக்கலாம்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]