ஒசாமா மரணம்: தலிபான் தலைவர் தகவல்
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் நுரையீரல் நோயினால் இறந்து விட்டதாகதலிபான் தலைவர் ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒசாமா அமெரிக்க படைகளின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் தோரா போரா மலைப்பகுதியில்பதுங்கியிருப்பதாக நம்பப்பட்டது. அதனால் அந்த பகுதிகளில் அமெரிக்கா மற்றும் தலிபான் எதிர்ப்பு படைகள்பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தலிபான் தலைவர் ஒருவர் ஒசாமா இயற்கையாகவே மரணமடைந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பாகிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் அப்சர்வர் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த ஒசாமா, அமெரிக்க தாக்குதலால் தன் நோய்க்கு சரியானபடிசிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவரது உடல் நிலை மோசமானது.
இதைத் தொடர்ந்து அவர் சில நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். அவர் கடைசியாக மறைந்து இருந்தஇடத்திலேயே புதைக்கப்பட்டார்.
அவரது இறுதி சடங்கில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். நானும்அதில் கலந்து கொண்டேன என்று அவர் கூறினார்.
ஆனாலும், ஒசாமாவின் மறைவு பற்றி அமெரிக்கா எந்த முடிவுக்கும் வரவில்லை. அவரை தேடும் பணி வழக்கம்போல நடந்து வருகிறது.