For Quick Alerts
For Daily Alerts
Just In
4 போச்சு... இன்னும் 5...
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது இன்னும் 5 வழக்குகள் உள்ளன.
திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா மீது 9 வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் 4 வழக்குகளிலிருந்துஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்னும் 5 வழக்குகள் பாக்கியுள்ளன. அவை இன்னும் தனி நீதிமன்றவிசாரணையில் உள்ளன.
டான்சி, பிளசண்ட் ஸ்டே, நிலக்கரி ஊழல் வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுவிட்டார்.பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வாங்கியதில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஜெயலலிதாஆரம்பத்திலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக இன்னும் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் விவரம்:
- வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு
- ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் வழக்கு
- லண்டனில் ஹோட்டல் வழக்கு
- அமெரிக்காவிலிருந்து 3 லட்சம் டாலர் அன்பளிப்பு வந்த வழக்கு
- மீனா அட்வர்டைசர்ஸ் வழக்கு
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]