தீவிரவாதிகளை பிடிக்க டெல்லி போலீஸ் புதிய நடவடிக்கை
டெல்லி:
ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார், இந்த அமைப்பின் இந்தியத் தலைவன் காஜிபாபா, இவனது கூட்டாளி தாரிக் அகமத் ஆகியோர் தான் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலைத் திட்டமிட்டுநடத்தியதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
மசூத் அஸார், காஜி பாபா என்ற அபு ஜிகாதி என்ற சக்லைன் மற்றும் தாரிக் இந்த மூவரும் சேர்ந்து தான் தாக்குதலைநடத்தத் திட்டமிட்டனர் என டெல்லி போலீசின் துணை கமிஷ்னர் அசோக் சந்த் நிருபர்களிடம் கூறினார்.
அவர் கூறுகையில், இவர்கள் தான் இந்தத் திட்டத்துக்கு தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பணம்,ஆயுதங்கள் ஆகியவற்றையும் வழங்கினர்.
இவர்களை டெல்லி போலீஸ் தேடி வருவோர் பட்டியலில் சேர்த்துள்ளது.
காஜி பாகிஸ்தானைச் சேர்ந்தவன். தாரிக் காஷ்மீரைச் சேர்ந்தவன். இவர்களின் புகைப்படங்கள் எங்களிடம்இல்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகம்மத் அப்ஸல் கொடுத்த தகவலை வைத்துஇவர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.
காஜி பாபா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவன். 6 அடி உயரமான இவன் மாநிறம் கொண்டவன்.உருது, ஆங்கில, பஞ்சாபி மொழிகள் பேசுவான். தாரிக் என்பவன் அனந்த் நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவன். 5 அடி10 அங்குல உயரம் கொண்டவன். நல்ல உடற்கட்டு கொண்ட இவன் உருது, காஷ்மீரி மொழிகள் பேசுவான்.
இவ்வாறு அசோக் சந்த் கூறினார்.
1999ம் ஆண்டு விமானக் கடத்தலையடுத்து இந்தியச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மசூத் அஸார்உடனடியாக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை உருவாக்கினான். அவனுக்கு பாகிஸ்தான் முழு நிதி, ஆயுதஉதவிகளை வழங்கியது. 1993ம் ஆண்டு காஷ்மீரில் ஹர்கத்-உல்-அன்சர் அமைப்பின் செயலாளராக இருந்துகொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டபோது அசார் கைது செய்யப்பட்டான். முன்னதாக.
இந்த அமைப்பை ஹர்கத்-உல்-முஜீகிதீன் என்ற பெயரில் நடத்தி வந்தான. அதை அமெரிக்கா தடை செய்தபோதுபெயரை மாற்றிக் கொண்டு தொடர்ந்து பாகிஸ்தான் உதவியுடன் இயங்கி வந்தான்.
இவனை விடுவிக்க இரு முறை வெளிநாட்டினரை பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் கடத்தினர். டெல்லியில்வெளிநாட்டுத் தூதரை கடத்தினார்கள. ஆனால், இந்தியா இவனை விடவில்லை. இறுதியில் பாகிஸ்தானை மிரட்டிஅந்த தூதரை அமெரிக்கா விடுவிக்கச் செய்தது.
பின்னர் 7 வெளிநாட்டினரை அல்-பரான் என்ற ஹர்கத் அமைப்பின் தீவிரவாதிகள் கடத்திச் சென்று வைத்துக்கொண்டு மசூத் அஸாரை விடுவிக்கக் கோரினர். அப்போதும் இந்தியா பணியவில்லை. இதில் ஒரு அமெரிக்கர்தப்பி வந்துவிட்டார். ஒரு நார்வே நாட்டுக்காரரின் தலையில்லா உடல் மட்டும் கிடைத்தது. மற்ற 5 பேரும் என்னஆனார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் கொல்லப்பட்டிருக்காலாம் என நம்ப்படுகிறது.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய விமானம் கடத்தப்பட்டு பயணிகளின் உயிர்கள் ஆபத்தில் சிக்கியபோதுதான் மசூதை இந்தியா விடுவித்தது.