எங்கள் ஏவுகணைகள் எல்லையில் இல்லை: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்திய எல்லை அருகே நாங்கள் ஏவுகணைகளைக் கொண்டுவந்து குவிக்கவில்லை என்று பாகிஸ்தான்கூறியுள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் ஏவுகணைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நேற்று கூறியிருந்தார்.
எல்லையில் இந்தியாவை நோக்கி பல ஏவுகணைகளை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வந்தன.
இதையடுத்து 150 கி.மீ. பாயும் பிரித்வி-1, 1500 கி.மீ. பாயும் அக்னி-1 ஆகிய ஏவுகணைகளை இந்தியாஎல்லைக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது.
ஆனால் எல்லைப் பகுதியில் நாங்கள் ஏவுகணைகளையே நிறுத்தவில்லை என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறைசெய்தித் தொடர்பாளர் ஜெனரல் ரஷித் குரேஷி தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் இந்தியா தொடர்ந்து பொய் கூறி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியா முழுமையான போருக்குத் தயாராகி விட்டது. நாங்களோ குறைந்த அளவு ராணுவத்தினரை மட்டுமேஎல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளோம். மேலும் முடிந்தால் மட்டுமே இன்னும் ஓரளவு ராணுவத்தினரை அனுப்பப்போகிறோம் என்றார் அவர்.