மீண்டும் டி.வியில் தோன்றினான் பின்லேடன்
கெய்ரோ (எகிப்து):
அரேபிய தொலைக்காட்சியான அல்-ஜசீராவில் மீண்டும் தோன்றிய பின்லேடன் அமெரிக்காவுக்கு எதிராக மிகக்கடுமையாக பேசினார்.
ஆப்கானிஸ்தானின் தோராபோரா மலைப் பகுதியில் பதுங்கியிருந்தாகக் கூறப்பட்ட பின்லேடன் இறந்துவிட்டதாகதகவல்கள் வந்தன. ஆனால், அவர் உயிரோடு இருப்பதாக நேற்று புதிய தகவல் வந்தது.
இந் நிலையில் பின்லேடனின் புதிய பேட்டியை அல்-ஜசீரா வெளியிட்டுள்ளது. இதில் பேசும் லேடன் இந்த கேசட்டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை மறைமுகமாகக் கூறுகிறார்.
ராணுவ உடையில் தோன்றிய பின்லேடன் அந்த கேசட்டில் கூறியிருப்பாவது:
மூன்று மாதங்களுக்கு முன் (செப்டம்பர் 11ம் தேதி) அமெரிக்கா என்ற அடக்குமுறையாளன் மீது சரியானதாக்குதல் நடந்தது. அமெரிக்கா இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாம் மதத்தின் மீது (ஆப்கானிஸ்தான் மீது)தாக்குலைத் தொடங்கியது.
வீடியோ கேசட் உண்மாைனது தான்:
பின் லேடனின் இந்த புதிய வீடியோ கேசட் உண்மையானது தான் என சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சரும்இளவரசருமான பின் அப்துல் அஸீஸ் கூறியுள்ளார். இது போலியாகத் தயாரிப்பட்டது அல்ல என்றார்.
பாகிஸ்தானில் இருந்து விமான கூரியர் சர்வீஸ் மூலம் கத்தார் நாட்டில் உள்ள அல்-ஜசீரா தொலைக்காட்சிநிலையத்துக்கு இந்த கேசட் வந்துள்ளது.
டிசம்பர் 7ம் தேதி வாக்கில் இந்த கேசட் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடும் என அமெரிக்கா கருதுகிறது. மேலும்அவரது முகம் வெளிரிப் போய் இருப்பது, அவர் பல நாட்களாக சூரிய ஒளியையே பார்க்கவில்லை என்பதைக்காட்டுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.