For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தான்: அமெரிக்க தாக்குதலில் 25 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று (வியாழக்கிழமை) காலை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல்நடத்தியதில் 25 கிராம மக்கள் பலியானதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை விரட்டியடித்து விட்டு கர்சாய் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.ஆனாலும் அமெரிக்காவின் மீதான தாக்குதலுக்கு காரணமான ஒசாமாவை இன்னும் பிடிக்க முடியவில்லை.

இதனால் அமெரிக்க படைகள் இன்னும் அவன் மறைந்திருப்பதாக சொல்லப்படும் கிழக்கு ஆப்கானிஸ்தானில்உள்ள தோரா போரா மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

இன்று அதிகாலை பாக்திகா மாகாணத்தில் உள்ள நாகா கிராமத்தில் அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர்படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்ததைகளும் என்று தெரிகிறது.

இந்த தாக்குதலில் தலிபான் கமாண்டர் மவுலாவி தாவ் வீடு உட்பட 5 வீடுகள் தரைமட்டமானதாகவும்கூறப்படுகிறது.

தோரா போரா மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் படைகளுடன் சேர்ந்து அமெரிக்க படைகள், தோரா போரா மலைப் பகுதியில்ஒசாமாவை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் படைகள் ஒவ்வொரு குகையாக நுழைந்து ஒசாமா மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளை தேடிவருகிறது.

இவர்களுக்கு ஆயுதங்கள், பணம் மற்றும் குளிர்கால ஆடைகளை அமெரிக்கா தந்து உதவுவதாக பெயர் வெளியிடவிரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X