அமெரிக்காவுக்கு அத்வானி சூடு
டெல்லி:
தீவிரவாதத்தால் அநேகமாக அனைத்து நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா தொடர்ந்துஇந்தியாவை அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை என்று உள்துறைஅமைச்சர் அத்வானி கூறினார்.
தீவிரவாதத்துக்கு அமெரிக்காவாலேயே தப்ப முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் தீவிரவாதத்துக்கு எதிராகஆப்கானிஸ்தான் மீது அந்நாடு உடனடியாகப் போர் தொடுத்துவிட்டது.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதிகளை வளர்த்து வருவதோடு நில்லாமல், அவர்களின்உதவியோடு இந்தியாவின் அமைதியையும் குலைத்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாநடவடிக்கை எடுக்கும்போது மட்டும் அமெரிக்கா அதைத் தடுக்க முயற்சித்து வருகிறது.
ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை எந்த நாட்டாலும் தடுக்க முடியாது.
இதனால்தான் பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்இந்தியா உள்ளது.
உச்சகட்டமாக நடந்த இந்திய நாடாளுமன்றத்தைத் தீவிரவாதிகள் தாக்கிய பிறகும் இந்தியாவால் சும்மா இருக்கமுடியாது. இதற்குத் தக்க பதிலடி கொடுத்தே தீருவோம் என்று ஆவேசத்துடன் கூறினார் அத்வானி.