காஷ்மீரில் அல்-கொய்தா தீவிரவாதி கைது
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவனைப்போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த நஜ்ஜார், கடந்த 45 நாட்களாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்குஅடைக்கலம் கொடுத்துள்ளான்.
நஜ்ஜாரையும் சேர்த்து இதுவரை 5 அல்-கொய்தாவினர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த 24ம் தேதி காஷ்மீர் போலீசாரிடம் பிடிபட்ட காமர் அயூப் என்ற அல்-கொய்தா தீவிரவாதியிடம் நடத்தியவிசாரணையின்போது, தீவிரவாதிகளுககு நஜ்ஜார் அடைக்கலம் கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வந்த ஏராளமான அல்-கொய்தா தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியாகஇந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், அல்-கொய்தா தீவிரவாதிகள் இங்கு பலசதிச் செயல்களிலும் ஈடுபடுவார்கள் என்றும் அஞ்சப்படுகிறது.