For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்முவில் 3 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

ஜம்மு ரயில் நிலையத்தைத் தாக்கிய 3 லஷ்கர்-ஏ-தொய்பாவின் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு ரயில் நிலையத்துக்குள் திடீரென்று புகுந்த இவ்வமைப்பின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒருவன்,துப்பாக்கியால் சராமாரியகச் சுட ஆரம்பித்தான். இவனுடன் மேலும் 2 தீவிரவாதிகளும் சேர்ந்து கொண்டு ரயில்நிலையத்தைக் கடுமையாகத் தாக்கினர்.

ஆனால் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியதில் அந்த 3தீவிரவாதிகளுமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் ஒரு பேராசிரியர் வீட்டில்ஒளிந்திருந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 3 ராணுவத்தினரும் பலியாயினர்.

காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மேலும் 6 தீவிரவாதிகளும் 5 பாதுகாப்புப் படையினரும்கொல்லப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X