For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏராளமான ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது பாக்.

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

போருக்குத் தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக பாகிஸ்தான் அரசு அதிகநிதி ஒதுக்கியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் அதிக அளவில் குவிப்பதற்காகவே பாகிஸ்தான் நிறைய ஆயுதங்களை இறக்குமதிசெய்யப் போவதாக அப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிதியை ஈடுகட்டுவதற்காக பாகிஸ்தான் அரசு அதிக அளவில் புதிய வரிகளை திணிக்கப் போவதாகவும்கூறப்படுகிறது.

ஆனாலும் இந்தியாவுடன் போர் வரும் என்ற பட்சத்தில்தான் இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

இந்தியா மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் சமாளிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

இந்தியாவானாலும் சரி, வேறு எந்த நாடானாலும் சரி. எங்களைத் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம்என்றும் அவர் பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எச்சரித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X