For Daily Alerts
Just In
ஏராளமான ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது பாக்.
இஸ்லாமாபாத்:
போருக்குத் தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக பாகிஸ்தான் அரசு அதிகநிதி ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியை ஈடுகட்டுவதற்காக பாகிஸ்தான் அரசு அதிக அளவில் புதிய வரிகளை திணிக்கப் போவதாகவும்கூறப்படுகிறது.
ஆனாலும் இந்தியாவுடன் போர் வரும் என்ற பட்சத்தில்தான் இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.
இந்தியா மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் சமாளிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
இந்தியாவானாலும் சரி, வேறு எந்த நாடானாலும் சரி. எங்களைத் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம்என்றும் அவர் பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எச்சரித்துள்ளார்.
Comments
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]