For Daily Alerts
Just In
குடும்பத்தோடு நாடு திரும்பும் 53 இந்தியத் தூதரக ஊழியர்கள்
இஸ்லாமாபாத்:
தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று இந்தியாவும் பாகிஸ்தானும்அறிவித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள 53 இந்தியத் தூதரக ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன்நாளை (சனிக்கிழமை) நாடு திரும்புகின்றனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் குடும்பங்கள் பெட்டி-படுக்கைகளைக் கட்டிக் கொண்டு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக ஊழியர்களை அழைத்துக் கொண்டு வருவதற்காக நாளை இந்தியன்ஏர்லைன்சின் சிறப்பு விமானம் இஸ்லாமாபாத் செல்கிறது.
அதேபோல் பாகிஸ்தான் ஏர்லைன்சின் சிறப்பு விமானம் டெல்லிக்கு வந்து அவர்களுடைய தூதரக ஊழியர்களைஅழைத்துக் கொண்டு செல்லவுள்ளது.
முன்னதாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் விஜய் கே. நம்பியார் ஏற்கனவே திரும்ப அழைக்கப்பட்டு விட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Saturday, June 1, 2002, 5:30 [IST]