அமைதியாக இருங்கள்: அமெரிக்கா மீண்டும் வேண்டுகோள்
வாஷிங்டன்:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பதற்றத்தைத் தவிர்த்து அமைதியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும்வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதுகாப்புக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு இரு நாடுகளுக்குமே உரிமை உண்டு என்றபோதிலும், இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
அதனால் இரு நாடுகளுமே அமைதியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
செப்டம்பர் 11ல் அமெரிக்க நகரங்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதற்குப் பிறகுதான், தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் மற்றும் அல்-கொய்தாதீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் தொடங்கியது.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக காஷ்மீரில் பாகிஸ்தான் வளர்த்து வரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும்வகையில் இந்தியா செயல்பட்டால் மட்டும் அதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது.
இதையடுத்து தீவிரவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து இரட்டை நிலையாகவே இருந்துவருகிறது.