For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயல், இசை, நாடக மன்றத் தலைவராகிறார் டி.எம்.எஸ்.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன்நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட டி.எம்.எஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னர் இப்பதவியை வகித்த திரைப்பட இயக்குநர் இராம. நாராயணனின் பதவிக் காலம் கடந்த மேமாதமே முடிந்துவிட்டது. நேற்று வரை அப்பதவி காலியாகவே இருந்து வந்தது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு டி.எம்.எஸ். இப்பதவியை வகிப்பார்.

மதுரையில் 1923ம் ஆண்டு பிறந்த டி.எம்.எஸ்., நான்கு தலைமுறையாக சினிமாவில் பாடிப் புகழ் பெற்றவர்.

அந்தக் கால நடிகர் நரசிம்ம பாரதியில் தொடங்கி இப்போதுள்ள விஜயகாந்த், சத்யராஜ் வரை ஏராளமானநடிகர்களுக்காகப் பின்னணி பாடிய அனுபவம் பெற்றவர் டி.எம்.எஸ்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய பெரும் நடிகர்களுக்கு இவர் பின்னணி பாடும்போது அவர்கள் பாடுவதுபோலவேதத்ரூபமாகப் பாடுவதில் வல்லவர் இவர்.

தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் பாடியுள்ள இவர், ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும்இசை அமைத்துப் பாடியுள்ளார்.

கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றவர் டி.எம்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X