For Quick Alerts
For Daily Alerts
Just In
இடைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் - அதிமுகவினருக்கு ஜெ. உத்தரவு
சென்னை:
வரும் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 4ம் தேதி முதல் அதிமுக தலைமைநிலையத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதிஇடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ரூ.10,000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் அதிமுக தலைமை நிலையத்தில் கிடைக்கும் என்று அந்தஅறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
Comments
Story first published: Friday, February 1, 2002, 5:30 [IST]