காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க அதிமுக முயற்சி: இளங்கோவன் குற்றச்சாட்டு
ஈரோடு:
காங்கிரஸ், திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க செங்கோட்டையன் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்,இந்த போக்கை நிறுத்தாவிட்டால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசி விட்டேன். பெரும்பாலானதொண்டர்கள் அதிமுக கூட்டணியை ஏற்க தயாராக இல்லை.
தங்கபாலு, யசோதா போன்ற சிலர் தான் சுயநலத்துக்காக அதிமுக கூட்டணி பற்றி பேசி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பது புதிய விஷயமில்லை. காங்கிரஸ் துவக்கத்தில் இருந்து சிலகொள்கைகளுக்காக கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. ஆனால் தற்போது சிலர் தங்களதுசுயநலத்துக்காக கோஷ்டி அரசியல் நடத்துகின்றனர்.
காங்கிரஸ், திமுக, தமாக எம்.எல்.ஏ.க்களை அதிமுக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் வலியசந்தித்து பேசி அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு கைமாறாக பணம் தருவதாகவும்கூறியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் விலை போக மாட்டார்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்துஇந்த வேலையில் அவர் ஈடுபட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து வரும் 5ம் தேதி கட்சிதலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறேன். அதன் பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று அவர்கூறினார்.