ஆப்கானிய மக்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள்
ஜெய்ப்பூர்:
ஆப்கானிஸ்தான் போரில் கால் இழந்தவர்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்துவதற்காக இந்தியமருத்துவக் குழு ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காபூலுக்கு விரைந்தது.
செயற்கைக் கால்கள் என்றாலே ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர்தான் ஞாபகத்திற்கு வரும். இங்குள்ளஎஸ்.எம்.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில்தான் இதுபோன்ற செயற்கைக் கால்கள்தயாரிக்கப்படுகின்றன.
ஆப்கானிஸ்தான் போரில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்துவதற்காக இங்கிருந்துஆயிரக்கணக்கான செயற்கைக் கால்களைக் கொண்டு செல்கிறது இந்த மருத்துவக் குழு.
இந்த குழு இதற்கு முன்பே 1996-97களில் இரு முறை ஆப்கானிஸ்தான் சென்று செயற்கை கால்களைப்பொருத்தியுள்ளது.
இந்த ஜெய்ப்பூர் செயற்கை கால் ஊனமுற்றவர்களுக்கு முழுவதும் பயன்படக் கூடிய சிறப்பான ஒன்று. இதன் மூலம்அவர்கள் சிரமமில்லாமல் நடக்க, ஓட, படிகளில் ஏறி, இறங்க முடியும்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்காக சிறப்பான மருத்துவ சேவைகளை இந்தியா செய்து வருவதாக அந்நாட்டின் புதியஇடைக்காலப் பிரதமர் ஹமீத் கர்ஸாய் சமீபத்தில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.