காஷ்மீரில் தீவிரவாதம் ஓயும்வரை பாக். மீது தொடர் நடவடிக்கை
டெல்லி:
காஷ்மீரில் பாகிஸ்தான் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் தீவிரவாதம் ஓயும்வரை அந்நாட்டின் மீது இந்தியாதொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கும் என்று இந்தியா கூறியுள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களை பாகிஸ்தான்கைது செய்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
இது உண்மையானால் பாகிஸ்தான் சரியான திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது என்று கூறலாம் எனவெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
ஆனாலும் காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் முழுமையா ஒழிக்கும் வரையில் அந்நாட்டின்மீது இந்தியா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருக்கும் என்றும் ஜஸ்வந்த் சிங்கூறினார்.
போதுமான ஆதாரங்களைத் தந்தால் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான்கூறியுள்ளதைப் பற்றி கேட்டபோது, அந்த நாடே ஒரு குற்றவாளியாக நின்று கொண்டிருக்கும்போது இந்தக்கேள்வியே தேவையில்லாதது என்றார் ஜஸ்வந்த் சிங்.