For Daily Alerts
Just In
புதுவை சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மத்திய சிறையில் 2 கோஷ்டிக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 4 கைதிகள் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாண்டிச்சேரி கலெக்டரும், சிறைத்துறை ஐ.ஜி.யுமான ஏ. அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:
சிறையில் உள்ள கைதிகளில் 2 கோஷ்டியினர் திடீரென்று பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் 4 பேர்காயமடைந்துள்ளனர்.
இவர்கள் இப்படிச் சண்டை போட்டுக் கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
சரியான சமயத்தில் சிறை அதிகாரிகள் பார்த்ததால் பெரிய அளவில் சேதம் ஏதுமில்லை. இந்த மோதலைப் பற்றிவிளக்கம் அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அன்பரசு.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]