For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 தீவிரவாதிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுத்தது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 20 தீவிரவாதிகள்மற்றும் குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துவிட்டது.

இந்தியாவில் பல்வேறு தீவிரவாதச் செயல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபட்ட இவர்களை உடனடியாகப்பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதர் ஜலீல் அப்பாஸ் ஜிலானியிடம் இந்தப் பட்டியல் இன்று(திங்கள்கிழமை) மாலை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அஸார், மும்பை ரவுடி தாவூத் இப்ராஹிம்ஆகியோர் இந்தப் பட்டியலில் முதன்மையாக இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 1993ல் மும்பையில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமான டைகர்மேனன், சோட்டா ஷகீல், 1999ல் காண்டஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய 5 தீவிரவாதிகள்ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

மேலும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன், ஹர்கத்-உல்-ஜிகாத்-ஏ-இஸ்லாமி,காலிஸ்தான் விடுதலை முன்னணி போன்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளின் பெயர்களும் அப்பட்டியலில்இடம் பெற்றுள்ளன.

லஷ்கர் அமைப்பு தலைவன் ஹபீஸ் முகம்மது சயீத் மற்றும் ஜெய்ஷ் அமைப்பின் தலைவன் மசூத் அஸார்ஆகியோரை பாகிஸ்தான் ஏற்கனவே கைது செய்துள்ளது. அஸாரை 90 நாள் சிறையிலடைக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 20 தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தால் மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயானநல்லுறவைப் புதுப்பிக்க முடியும் என்று சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

முன்னதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலிடமும் இந்தத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்துதெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X