For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணகி சிலையை மீண்டும் நிறுவ முயன்ற 64 தமிழறிஞர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவ முயன்ற தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் 64 பேரை போலீசார்கைது செய்தனர்.

கடந்த 33 வருடங்களாக சென்னை கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை வாஸ்து சாஸ்திரத்தை சொல்லி தமிழகஅரசு அகற்றியதை பல கட்சிகளும் கண்டனம் எழுப்பி உள்ளன.

அந்த சிலையை அதே இடத்தில் நிறுவ எதிர்க்கட்சிகள், தமிழறிஞர்கள் உட்பட் பலரும் போராட்டம் நடத்திவருகின்றனர். கண்ணகி சிலையை வேறு இடத்தில் வைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தமிழர் தேசிய பொதுவுடமைக் கட்சியின் பண்பாட்டு கலை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்மணியரசன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) 64 பேர் அண்ணாசதுக்கத்தில் இருந்து கண்ணகி சிலை இருந்தஇடத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

இவர்கள் கண்ணகி சிலை இருந்த இடத்தில் மூன்று அடி உயரமுள்ள பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்டகண்ணகி சிலையை வைக்க முயன்றனர். ஆனால் போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.

இதற்கு ஒப்புக்கொள்ளாத அவர்கள் 64 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொண்டு வந்த கண்ணகிசிலையையும் பறிமுதல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X