எல்லையில் மரணம் அடைந்த மேட்டூர் வீரர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி
சென்னை:
காஷ்மீர் எல்லையில் வீர மரணம் அடைந்த மேட்டூர் வீரர் அண்ணாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம்நிதியுதவி அளிக்கிறது. அவருடைய மனைவிக்கும் வேலை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் டி. அண்ணா வீர மரணம்அடைந்தார்.
நாட்டின் பாதுகாப்புப் பணியில் தன்னுடைய இன்னுயிரைக் கொடுத்த அந்த வீரருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
மேலும் அண்ணாவின் மனைவி லாவண்யாவுக்கு அவருடைய கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய அரசுப்பணி வழங்கப்படும் என்றார் பன்னீர்செல்வம்.