For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் கும்பலுக்கு உதவிய 2 பேர் கைது: ரூ.1 லட்சம் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலுக்கு உதவிய அவனுடைய நெருங்கிய கூட்டாளி சந்திர கவுண்டரின் தாயாரையும்சகோதரரையும் போலீசார் கைது செய்தனர்.

சந்தன கடத்தல் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளி சந்திர கவுண்டர் என்னும் சந்திரன். நேற்று (திங்கட்கிழமை)பங்களாப்புதூர் போலீசார் சந்திர கவுண்டரின் தாயார் சின்னம்மாள் வசித்து வரும் ஜாத்ரக்கோம்பை வீட்டில்சோதனை நடத்தினர்.

அதே போல் சந்திர கவுண்டர் அண்ணன் தங்கவேல் (43) வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்500 ரூபாய் நோட்டுக்களாக ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவர்களை விசாரித்ததில் இந்த பணம் வீரப்பன் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்ததையும்,உணவு பொருள்கள் சப்ளை செய்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்திற்கு பின்னர் சந்திர கவுண்டர் மூலம் இந்தப் பணம்வந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதன் பிறகு இவர்களை கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இவர்களை 15நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X