For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பி ஓட்டம்: ஒருவன் பிடிபட்டான்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகளில் ஒருவனை வத்தலகுண்டு அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

கடந்த டிசம்பர் 1ம் தேதி மதுரை மத்திய சிறையிலிருந்து பீட்டர் (30), மாரியப்பன் (35) இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் பீட்டர் என்பவன் வத்தலகுண்டுவில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் தன் தாயாருக்காக காத்திருந்த அவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

பிறகு மதுரைக்கு அவன் கொண்டு வரப்பட்டு கரிமேடு போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்துவருகின்றனர். அவன் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தப்பி ஓடிய மற்றொரு கைதியும் விரைவில்பிடிபடுவான் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கைதான கொள்ளையன் தப்பி ஓட்டம்:

மதுரை வில்லாபுரம் பழனிமுத்து நகரை சேர்ந்த தனலெட்சுமி என்பவரிடமிருந்து ஒருவன் 6 பவுன் தங்கசங்கிலியைபறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான்.

இது சம்பந்தமாக வில்லாபுரம் அவுசிங் போர்டு காலனியை சேரந்த சன்னாசியை (17) கடந்த மாதம் 15ம் தேதிபோலீசார் கைது செய்தனர்.

போலீசார் சம்பவத்தன்று மதுரை ரிசர்வ் லைன் காலனியில் உள்ள நீதிபிதியின் வீட்டுக்கு கைவிலங்குடன் போலீசார்அழைத்துச் சென்றனர்

அப்போது சன்னாசியின் கைவிலங்கை கழட்டும்போது அவன் நீதிபதியின் காம்பவுண்டு சுவரை தாண்டி தப்பி ஓடிவிட்டான். அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X