For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய-பாக். அமைச்சர்களாவது பேச்சு நடத்த வேண்டும்: அமெரிக்கா கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இருவரும் தனியேசந்தித்துப் பேச வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

எல்லைப் பகுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் படைகளைக் குவித்துள்ள நிலையில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது. இரு நாடுகளும் எந்த நேரத்திலும் மோதலாம் என்ற நிலையில் சார்க் மாநாடு நேபாளத்தில்தொடங்கியுள்ளது.

இதில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபும் கலந்துகெண்டுள்ளனர்.

ஆனால், இக் கூட்டத்தில் முஷாரபுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டேன் என பிரதமர் வாஜ்பாய்கூறிவிட்டார்.

இந் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்அப்துல் சத்தாரும் சந்தித்துப் பேச்சு நடத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுன்சர் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்திய, பாகிஸ்தான் தலைவர்களும் அமைச்சர்களும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்தில் உள்ளனர்.இது நிலைமையை சீராக்க மிக சிறந்த வாய்ப்பாகும். தலைவர்கள் சந்தித்துப் பேசினால் நல்லது. குறைந்தபட்சம்அமைச்சர்களாவது சந்தித்துப் பேச வேண்டும்.

நேற்று காஷ்மீர் சட்டசபை அருகே மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை அமெரிக்கா வன்மையாகக்கண்டிக்கிறது.

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் வென்டிசேம்பர்லின் இருவருமே இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டுவிடாமல் தடுக்க முழு முயற்சிமேற்கொண்டுள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X