சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம்: தமாகா
சென்னை:
தமிழக அரசு விரைவில் சிமெண்ட் விலையை குறைக்காவிட்டால் வெகுஜன போராட்டம் நடத்தப்படும் என்றுதமாகா எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் சிமைண்ட் விலை உயர்ந்த போது நாங்கள் சிமெண்ட்டை வாங்கி குறைந்த விலைக்கு விற்றோம்.அதிமுக ஆட்சிக்கு வந்த போது சிமெண்ட் விலை குறைந்தது.
ஆனால் இப்போது மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் மட்டும் விலை ஏற்றம் செய்தகும்பல், இப்போது நாடு முழுவதும் கூட்டணி அமைத்து கொள்ளை அடித்து வருவதே இதற்கு காரணம்.
மத்திய அரசு சிமெண்ட் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைத்தாலே சிமெண்ட் விலை குறைந்து விடும்.இது பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால்வெகுஜன போராட்டம் நடத்துவோம்.
சில மாநிலங்களில் குறைந்த விலையில் தரமான சிமெணட் விற்கிறது. அவற்றை அரசே வாங்கி ரேஷன் கடைகள்,கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கலாம் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் பாண்டுரங்கனுக்கு கடிதம்எழுதியுள்ளேன் என்று அவர் கூறினார்.