இடைத் தேர்தல்: திமுகவுக்கு பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக ஆதரவு
சென்னை:
ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சென்னை சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் நடக்கவுள்ள இடைத் தேர்தலில்திமுக வேட்பாளர்களுக்கு பா.ஜ.க. ஆதரவளிக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.கவின் தேர்தல் குழு மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.
பா.ஜ.க. அகில இந்தியத் துணைத் தலைவர் ராமாராவ், பொருளாளர் சுகுமாரன், மாநிலத் தலைவர் கிருபாநிதி,பொதுச் செயலாளர் இல.கணேசன், மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் இதில்பங்கேற்றனர்.
அதில், வரும் இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதுஎனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ.கவுக்கு அதிமுக வலை விரித்து வரும் நிலையில் இத் தேர்தலில் திமுகவைத் தான் ஆதரிப்போம் எனஇல.கணேசன் துவக்கத்திலேயே கூறிவிட்டார். ஆனால், இது தொடர்பாக அதிகார்பபூர்வமாக சொல்ல வேண்டும்என திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாககக் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று இக் கூட்டம் கூடி திமுகவை ஆதரிக்கவும், திமுகவுக்காக பிரச்சாரம் செய்யும்முடிவெடுக்கப்பட்டது.